எதிர்வரும் ஏப்ரல் 04ஆம் திகதி ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் நாளை முதல் 05 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.
இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனைக் கூறியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்திற்கு அமைய, இந்த பாதுகாப்பு நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
பொலிஸார் முன்னெடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு, இராணுவத்தினரும் ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள் என அவர் குறிப்பிடுகின்றார்.
மேலும், அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவிக்கின்றார்.