வாவியில் குளிக்க சென்ற சிறுவனை முதலையொன்று இழுத்துச் சென்றுள்ளது! தேடும் பணிகள் தொடர்ந்தும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாவியில் குளிக்க சென்ற சிறுவனை முதலையொன்று இழுத்துச் சென்றுள்ளது! தேடும் பணிகள் தொடர்ந்தும்!

முதலை ஒன்றினால் இழுத்துச் செல்லப்பட்ட 15 வயது சிறுவனைக் கண்டுபிடிக்க பொலிஸார் மற்றும் கடற்படையினர் கூட்டு தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பூர், இத்திகுளம் வாவியில் குளிக்கச் சென்ற போது சிறுவன் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“மூன்று சிறுவர்கள் குளிக்க வாவிக்கு சென்றிருந்தனர், அவர்களில் ஒருவர் சம்பவத்தைத் தொடர்ந்து காணவில்லை" என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.


இதேவேளை, ஹசலக பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நீராட சென்ற 43 வயது தந்தை மற்றும் 13 வயது அவரது மகன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

பின்னர் மகனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தந்தையை தேடி பணி தொடர்ந்தும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.