
சம்பூர், இத்திகுளம் வாவியில் குளிக்கச் சென்ற போது சிறுவன் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
“மூன்று சிறுவர்கள் குளிக்க வாவிக்கு சென்றிருந்தனர், அவர்களில் ஒருவர் சம்பவத்தைத் தொடர்ந்து காணவில்லை" என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஹசலக பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நீராட சென்ற 43 வயது தந்தை மற்றும் 13 வயது அவரது மகன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
பின்னர் மகனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தந்தையை தேடி பணி தொடர்ந்தும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)


