பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம் பங்களாதேஷிற்கான விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.
பங்களாதேஷின் 50ம் சுதந்திர தின நிகழ்வுகளில் பிரதமர் மஹிந்த பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாலைத்தீவு ஜனாதிபதி, நேபாளத்தின் ஜனாதிபதி, இந்திய பிரதமர், பூட்டானின் பிரதமர் மற்றும் இலங்கை பிரதமர் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் டொக்டர் ஏ.கே. அப்துல் மொமென் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.