ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்தாரிகள் படங்களுடன் வெறுப்புணர்வை தூண்டும் பதிவு; மாத்தளையில் ஒருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்தாரிகள் படங்களுடன் வெறுப்புணர்வை தூண்டும் பதிவு; மாத்தளையில் ஒருவர் கைது!


இனங்களுக்கு இடையில் கருத்து மோதல் ஏற்படும் விதத்தில் வெறுப்புனர்வை தூண்டும் விதமாக முகப்புத்தகத்தில் புகைப்படங்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.


மாத்தளை – யட்டவத்த பகுதியில் வைத்து சந்தேக நபர் நேற்று முன்தினம் (07) இரவு சிறப்பு பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


53 வயதான குறித்த நபர் கடந்த மார்ச் 04 ஆம் திகதி அல்லது அண்மித்த நாட்களில் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் பேஸ்புக்கில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். சந்தேகநபர் ஏப்ரல் 21 தாக்குதல்தாரிகள் புகைப்படங்களுடன் மேலும் சிலரின் புகைப்படங்களை உள்ளடக்கி இனங்களுக்கு இடையில் முரண்பாட்டையும் வெறுப்புணர்வையும் தூண்டும் விதத்தில் புகைப்படங்களை பதிவேற்றியதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


எம்.பி. ஏக்கநாயக்க எனும் பெயரில் பேஸ்புக் கணக்கு ஒன்றை பயன்படுத்தியே சந்தேக நபர் இவ்வாறு செயற்பட்டுள்ளார். சந்தேக நபருக்கு எதிராக தண்டனை சட்டக்கோவையின் 120 ஆம் அத்தியாயத்தின் கீழும், கணினிக் குற்றங்கள் தொடர்பிலான சட்டத்தின் 06ஆம் அத்தியாயத்தின் கீழும் விஷேட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


சந்தேக நபர் கொழும்பு கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


-எம்.எப்.எம்.பஸீர்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.