அரசின் பொறுமையை சோதிக்கும் வகையில் தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம்! -அமைச்சர் கெஹெலிய

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசின் பொறுமையை சோதிக்கும் வகையில் தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம்! -அமைச்சர் கெஹெலிய


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு, தமிழ் மக்களுக்கு எதிரான அரசு அல்ல. இந்நிலையில், அரசுக்கு எதிராகவும், அரசின் பொறுமையைச் சோதிக்கும் வகையிலும் ஐ.நா.விடம் நீதி கோரி வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தற்போதுபோராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.


ஐ.நா.வோ அல்லது சர்வதேச நாடுகளோ தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு வழங்காது. எனவே, தேவையற்ற போராட்டங்களை தமிழ் மக்கள் உடனே நிறுத்த வேண்டும் என அரசின் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத்தொடர் தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதி கோரி வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.


இது தொடர்பில் கருத்துரைக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது,


போரின் போது தமிழ் மக்களுக்கு அநீதிகள் இடம்பெற்றிருந்தால் அதற்கான தீர்வுகளை அரசு தான் வழங்கும். அதை விடுத்து நாட்டின் சட்ட திட்டங்களை மீறி ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் தமிழ் மக்கள் நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.


தமிழ் மக்களின் இந்தப் போராட்டங்களின் பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகளும்,புலம்பெயர் அமைப்பினரும் செயற்படுகின்றனர்.


$ads={1}


இரு தரப்பினரும் தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப தமிழ் மக்களைப் பகடைக்காய்களாக்குகின்றனர். அரசின் பொறுமையைச் சோதிக்கும் வகையில் தேவையற்ற போராட்டங்களை முன்னெடுப்பதை தமிழ் மக்கள் உடன் நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.