பெட்ரோல் வாசனையை முகர்ந்த சிறுவன் பரிதாபமாக பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெட்ரோல் வாசனையை முகர்ந்த சிறுவன் பரிதாபமாக பலி!

பெட்ரோல் வாசனையை முகர்ந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம், தம்புள்ளை – வெலமிடியாவ பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் தம்புள்ளை – வெலமிடியாவ ஆரம்பப்பள்ளியில் தரம் இரண்டில் கல்வி பயிலும் சஜித் குமார முனசிங்க என்ற 7 வயதுச் சிறுவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் நேற்று மதியம் தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ள நிலையில், அங்கு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தொட்டியில் இருந்து மூடியை அகற்றி பெட்ரோல் வாசனை முகர்ந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இதன்போது மயக்கமடைந்த சிறுவனை கலேவெல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் , மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.