முழு விபரம் - ஹிருணிகாவின் பிடியானை வாபஸ்! தாய் மார்களுக்கான விசேட வேண்டுகோளை முன்வைத்த ஹிருணிகா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முழு விபரம் - ஹிருணிகாவின் பிடியானை வாபஸ்! தாய் மார்களுக்கான விசேட வேண்டுகோளை முன்வைத்த ஹிருணிகா!

கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார்.

ஹிருனிகா பிரேமசந்திர தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜரானதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2015 டிசம்பர் மாதம் தெமடகொடையில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அவர் இன்று (10) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிவிட்டார்.

கொழும்பு உயர்நீதிமன்றம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பித்ததாகவும், அவர் நீதிமன்ற வளாகத்தில் இருந்தபோது, ​​தனது 1 1/2 மாத குழந்தைக்கு தனது வாகனத்திற்குள் வைத்து உணவளித்ததாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தனது குழந்தையுடன் வந்ததாக, தனது வழக்கறிஞர் நீதிபதிக்கு தெரிவித்த பின்னர், அவரை கைது செய்ய வழங்கப்பட்ட பிடியாணையினை நீதிபதி திரும்பப் பெற்றார்.

ஒவ்வொரு நீதிமன்ற விசாரணைக்கும் ஹிருனிகா ஆஜரானார் என்பதையும், இன்று மாத்திரம் நீதிமன்றத்திற்கு ஆஜராகத் தவறிவிட்டார் என்பதையும் கருத்தில் கொண்டு பிடியாணை வாபஸ் பெறுவதாக நீதிபதி அறிவித்திருந்தார்.

குழந்தைகளுடன் பல பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது சிரமங்களை எதிர்கொள்கிறார்கள், மேலும் அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்கவோ அல்லது தங்கள் குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவோ பொருத்தமான இடம் நீதிமன்ற வளாகத்தில் இல்லை எனவும் ஹிருனிகா பிரேமச்சந்திரா தெரிவித்தார்.

எனவே, குழந்தைகளுடன் தாய்மார்கள் நீதிமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளும் போது, அவர்களுக்கு வேண்டிய ஒரு தனி பகுதியை ஒதுக்குவதை உறுதி செய்யுமாறு நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.