பொலிஸார் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸார் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

மோட்டார் சைக்கிள் விபத்துக்களைத் தடுக்கும் பொருட்டு பொலிஸ் அதிகாரிகளினால் இன்று முதல் நான்கு நாள் சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களினால் தினசரி சுமார் ஐவர் இறப்பதாக பொலிஸ் ஊடக தொடர்பாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள்களை ஆய்வு செய்வதற்கும், போக்குவரத்து விதி மீறல்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் பொடுபோக்கான சவாரி போன்றவற்றை கண்காணிக்கவும் சிறப்பு நான்கு நாள் நடவடிக்கைகள் நாடு முழுவதும் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை எந்த வகையிலும் துன்புறுத்துவதற்கோ அல்லது அச்சுறுத்துவதற்கோ பொலிஸாஎ இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றும் டி.ஐ.ஜி அஜித் ரோஹன மேலும் சுட்டிக்காட்டினார்.

விபத்துக்களைக் குறைப்பதற்கும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் வீதி விபத்துக்களுக்கு ஆளாகாமல் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாவும் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக விபத்துக்களில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டினார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.