நாட்டில் திருமண பதிவு கட்டணம் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் திருமண பதிவு கட்டணம் அதிகரிப்பு!


திருமணப் பதிவுக்கான கட்டணங்களை அதிகரிக்கப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் நேற்று அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார்.

அதன்படி, திருமண விபரம் சமர்ப்பிக்கப்பட்ட 12ஆம் நாளின் பின் நடக்கும் திருமணத்திற்கு 2,500 ரூபா வரை திருமணப் பதிவுக் கட்டணத்தை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

திருமண நாள் குறித்து அறிவிக்கப்பட்டு 12 நாட்களுக்குமுன் வீடுகளில் திருமணப் பதிவை நடத்தப்பட்டால் அதற்கான புதிய கட்டணமாக 1,000 ரூபாவை நிர்ணயிக்கவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டிலிருந்து இந்தக்கட்டணமானது வெறும் 50 ரூபாவாகவே இருந்து வருகிறது.

அதேபோல, திருமண மண்டபத்தில் வைத்து பதிவாளர் முன் பதிவுசெய்வதற்கான கட்டணத்தை 1,500 ரூபாவாக அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணமும் 2012ஆம் ஆண்டிலிருந்து 50 ரூபாவாக உள்ளதோடு, பதிவாளருக்கு கொடுக்க வேண்டிய கட்டணமாக 3,500 ரூபா என்பதை நிர்ணயிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.