பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் நபர் மீது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொடூரமாக தாக்குதல் நடத்தியதைப் போன்றே இன்னுமொரு பிரதேசத்திலும் இதேபோன்ற தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.
ஹம்பாந்தோட்டை – வீரவில பிரதேசத்திலும் நேற்று (29) பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திய காணொளி, புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகின்றது.
எனினும் இதுகுறித்த உண்மை நிலவரம் இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.