ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து 18,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத் தலைநகரான சிட்னியைச் சுற்றியும் தென்கிழக்கு குவீன்ஸ்லாந்தை சுற்றியும் உள்ள ஆறுகள், அணைக்கட்டுகள் நிரம்பி வழிகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சில இடங்களில் 25 செ.மீட்டர் வரை மழை பெய்துள்ளது.
ஐம்பது ஆண்டுகள் காணாத மழை கடந்த சில வாரங்களாக பெய்து வருவதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
இதற்கிடையே மழை, வெள்ளம் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தேவையான உதவி வழங்கப்படும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.
நியூ சவூத் வேல்ஸ் மாநில முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன், இதுவரை உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் ஆஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்கள் தொகையில் ஒரு பங்கினர் வசிக்கும் பாதிக்கப்பட்ட இடங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்றார் அவர்.
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு நேற்று எட்டு மில்லியன் குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே கொள்ளைநோய் பரவலில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியாவுக்கு கனமழை மேலும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சுமார் 200 பள்ளிகள் மூடப்பட்டன. நேற்று வெள்ளம் சற்று வடிந்ததால் ஒரு சிலர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பெரும்பாலோர் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இந்த நிலையில் வரும் நாட்களில் பருவ மாற்றம் காரணமாக தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத் தலைநகரான சிட்னியைச் சுற்றியும் தென்கிழக்கு குவீன்ஸ்லாந்தை சுற்றியும் உள்ள ஆறுகள், அணைக்கட்டுகள் நிரம்பி வழிகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சில இடங்களில் 25 செ.மீட்டர் வரை மழை பெய்துள்ளது.
ஐம்பது ஆண்டுகள் காணாத மழை கடந்த சில வாரங்களாக பெய்து வருவதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
இதற்கிடையே மழை, வெள்ளம் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு தேவையான உதவி வழங்கப்படும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.
நியூ சவூத் வேல்ஸ் மாநில முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன், இதுவரை உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் ஆஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்கள் தொகையில் ஒரு பங்கினர் வசிக்கும் பாதிக்கப்பட்ட இடங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்றார் அவர்.
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு நேற்று எட்டு மில்லியன் குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே கொள்ளைநோய் பரவலில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியாவுக்கு கனமழை மேலும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சுமார் 200 பள்ளிகள் மூடப்பட்டன. நேற்று வெள்ளம் சற்று வடிந்ததால் ஒரு சிலர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பெரும்பாலோர் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இந்த நிலையில் வரும் நாட்களில் பருவ மாற்றம் காரணமாக தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.