பொலித்தீன் பையில் அடைத்து வைக்கப்பட்ட பெண்ணின் சடலம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலித்தீன் பையில் அடைத்து வைக்கப்பட்ட பெண்ணின் சடலம்!

கொழும்பு நகரப்பகுதியில் இன்று (01)  பிற்பகல் அடையாளம் தெரியாத நிலையில் ஒருவருடைய சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டாம் வீதியில் உள்ள காஸ் வேக் சந்தியில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பயணப் பையொன்றில் குறித்த சடலம் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இது பெண்ணின் சடலம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கமான 119 இற்கு கிடைத்த தகவலைத் தொடந்து சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த இடத்தில் உள்ள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.