கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களுக்கான விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களுக்கான விசேட அறிவித்தல்!

சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு முடியாமல் போனவர்கள் இருப்பார்களாயின் உடனடியாக அது தொடர்பாக குறித்த பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிக்கு தெரியப்படுத்தி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் எவ்வித தடைகளுமின்றி கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு தேவையான வசதிகளை வழங்கியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உலக சுகாதார அமைப்பினால் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கவுள்ள தடுப்பூசிகளின் முதல் தொகுதி எதிர்வரும் சில நாட்களுக்குள் கிடைக்கவிருப்பதாகவும், அவை கிடைத்தவுடன் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.