தேர்தல் வருமா இல்லையா என தெரியாத நிலையில் மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேசி பயனில்லை! -இரா.சாணக்கியன்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேர்தல் வருமா இல்லையா என தெரியாத நிலையில் மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேசி பயனில்லை! -இரா.சாணக்கியன்


வடக்கு - கிழக்கு பகுதிகளில் முறையான அனுமதி பெறப்படாது நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் பார்வையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


வவுனியாவில் ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,


வவுனியாவில் பல இடங்களில் நடைபெறும் சூழலை சேதப்படுத்தும் செயற்பாடுகளை அவதானித்தோம். ஒரு பகுதியில் காடழிப்பு இடம்பெற்று 20 அடிக்கு மேல் கிடங்கு வெட்டி மண் அகழ்வு இடம்பெறுகிறது.


நாங்கள் சென்ற போது அங்கிருந்து வாகனங்கள் சென்று விட்டன. இதேபோல் இலங்கையில் அனைத்து பிரதேசங்களிலும் பாரிய சூழலுக்கு எதிரான விடயங்கள் நடைபெறுகின்றன.


மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுகிறது. அது தொடர்பில் பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தில் நிறுத்துமாறு கோரிய போதும் இன்று வரை நிறுத்தப்படவில்லை.


வடக்கு - கிழக்கு பகுதிகளில் முறையான அனுமதி பெறப்படாது நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளை இனிவரும் காலங்களில் பார்வையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


இதன்போது மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டுள்ள நிலையில் வடக்கு - கிழக்கு பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்கு வங்கியில் அதிகரிப்பை ஏற்படுத்த எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதென ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது,


தேர்தல் வரும் போது அது பற்றி பார்க்கலாம். ஜனாதிபதி தேர்தல் வரும் என்று சொல்லியிருக்கின்றார். தேர்தல் வருமா இல்லையா எனத் தெரியாத நிலையில் மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேசி பயனில்லை என்று பதிலளித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.