கொழும்பில் இந்தியர்களால் சட்டவிரோத சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் இந்தியர்களால் சட்டவிரோத சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை!


சுற்றுலா விசாக்களில் இலங்கைக்கு வரும் இந்திய பிரஜைகள் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக விற்பனையில் ஈடுபடுவது தொடர்பாக  சிறப்பு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை நேற்று (24) நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

நேற்று (24) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திர ஜெயசூரிய முன்னிலையில் பொலிசார் இந்த தகவலை வழங்கினர்.

கொழும்பில் உள்ள பல முன்னணி தனியார் மருத்துவமனைகளில் சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சிறுநீரக மாற்று சிகிச்சைகளுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் நீண்ட காலமாக சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்டு இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.