இந்தோனேசியாவில் எமர்சன் காடுகளில் காடழிக்கப்பட்ட மரங்களின் புகைப்படங்களை வெளியிட்டு, அது சிங்கராஜ வனப்பகுதியில் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டி சிலர் சமூக வலைத்தளங்களில் தவறான பிரச்சாரங்களை பரப்புவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற தவறான பிரச்சாரங்களால், உண்மையான சம்பவத்தைக் கூட கண்டுபிடிப்பது கடினம் என்று அமைச்சர் கூறினார்.
எனவே, சிங்கராஜ காடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில், கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் அமரவீர காடழிப்பு குறித்து தவறான மற்றும் தீங்கிழைக்கும் தகவல்களை வெளியிடுவோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவார் என்று கூறினார்.
மேலும் சுற்றுச்சூழலுக்கு சில சேதங்கள் ஏற்பட்டிருப்பதை ஒப்புக்கொண்ட அவர், பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.