சிங்கள தமிழ் புத்தாண்டின் போது கூட்டங்களுக்கு தடை செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை நாட்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்த இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
இருப்பினும், கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அதிகளவான மக்கள் கூடும் கூட்டங்கள் தடை செய்யப்படும் என்று அவர் கூறினார்.
விடுமுறை நாட்களில் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தப்படுவார்கள் என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.
மேலும் புத்தாண்டில் குடும்பங்கள் ஒன்றுபடுவதைத் தடுக்கும் என்பதால் பயணக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த அரசாங்கம் அக்கறை காட்டவில்லை என்று அவர் மேலும் கூறினார்.