வீடியோ: மியன்மாரில் இன்று சிறுவன் உட்பட 64 பேர் சுட்டுக்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீடியோ: மியன்மாரில் இன்று சிறுவன் உட்பட 64 பேர் சுட்டுக்கொலை!


மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட தலைவர்கள் ஆயுதப் படைகள் தினத்தை கொண்டாடிய நிலையில், அங்கு ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்துள்ளன.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு எதிராக இராணுவத்தினர் கட்டவிழ்த்துள்ள வன்முறைகளில் சிக்கி கடந்த 24 மணித்தியாலங்களில் 64 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட 28 இடங்களில் சிறுவர்கள் மூவர் உள்ளிட்ட 59 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் சில செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.

ஜனநாயகத்தை பாதுகாப்பதாக ஆளும் இராணுவத்தளபதி Min Aung Hlaing உறுதியளித்துள்ள நிலையில், இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தலையிலும் முதுகிலும் சுடப்படலாம் என தேசிய தொலைக்காட்சி வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், யங்கூன், மண்டலே பகுதி மக்கள் இன்று வீதியில் இறங்கியுள்ளனர்.

பெப்ரவரி முதலாம் திகதி அமுலுக்கு வந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்களின் போது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் குண்டுத்தாக்குதல்களில் 320க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.