புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் கலக்கப்பட்ட தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ததாகக் கண்டறியப்பட்ட 03 நிறுவனங்களுக்கு அரசாங்கம் சீல் வைத்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட தேங்காய் எண்ணெயிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்குப் பிறகு, அது நுகர்வுக்கு ஏற்றதல்ல என்று தீர்மானிக்கப்பட்டது என்று பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அசுத்தமான தேங்காய் எண்ணெயை மீண்டும் ஏற்றுமதி செய்யும் வரை 03 நிறுவனங்களுக்கும் சீல் வைத்துள்ளதாக அவர் கூறினார்.