புத்தளம் பகுதியில் சஹ்ரானின் மத்ரஸா பள்ளியில் பணிபுரிந்த இரு இளைஞர்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புத்தளம் பகுதியில் சஹ்ரானின் மத்ரஸா பள்ளியில் பணிபுரிந்த இரு இளைஞர்கள் கைது!


ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹாஷிமினால் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் மத்ரஸா பள்ளியில் பணிபுரிந்த இளைஞர்கள் இருவரைக் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


சந்தேக நபர்கள் இருவரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பட்டார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,


புத்தளம் பகுதியில் இயங்கிவரும் மத்ரஸா பள்ளி ஒன்றில் பணி புரிந்து வந்த இளைஞர்கள் இருவரை நேற்று (26) குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.


சந்தேக நபர்களை கைது செய்யுமாறு சட்ட மா அதிபரினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமையவே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


சிலாபம் மற்றும் மதுரங்குளி பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களால் செயற்படுத்தப்பட்டுவரும் மேற்படி மத்ரஸா பள்ளியில் ஸஹ்ரான் ஹாஷிம் வகுப்புகளை நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.


இது தொடர்பான விசாரணைகளுக்காகவே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.