தனிமைப்படுத்தல் வசதிகளை இலவசமாக வழங்க நடவடிக்கை! -தொழில் அமைச்சர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிமைப்படுத்தல் வசதிகளை இலவசமாக வழங்க நடவடிக்கை! -தொழில் அமைச்சர்


வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நாடு திரும்பும்போது, அவர்களுக்கு தனிமைப்படுத்தல் வசதிகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


தம்புள்ளையில் இன்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை கூறியுள்ளார்.


அத்துடன், இந்த செயற்பாட்டுக்காக 10 ஹோட்டல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதற்மைய, குறித்த ஹோட்டல்களில் 07 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடம் இருந்து எந்தவித கட்டணமும் அறவிடப்படமாட்டாது என, அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், வெளிநாட்டில் இருந்து அழைத்துவரப்படும் இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்தல் வசதிகளை வழங்கும் விடயத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.


அத்துடன், கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் பல்வேறு நாடுகளில் இருந்து 53 ஆயிரம் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்துவர முடிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.