இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, உசாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 53 வயது பெண், கிரிவுள்ள பகுதியைச் சேர்ந்த 78 வயது பெண், கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 72 வயது ஆண், மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான பெண் மற்றும் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெண் ஆகியோரே இறுதியாக கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 489 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.