இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 ​பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.


அதன்படி, உசாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 53 வயது பெண், கிரிவுள்ள பகுதியைச் சேர்ந்த 78 வயது பெண், கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 72 வயது ஆண், மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான பெண் மற்றும் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 70 வயதான பெண் ஆகியோரே இறுதியாக கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 489 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.