ஹிஜாப்பினை தடை செய்யும் நோக்கம் எதுவுமில்லை என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஹிஜாப்பினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என்பதால் அதனை தடை செய்யும் நோக்கம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அனுமதி கிடைத்ததும் புர்காவும் நிகாப்பும் தடை செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தேவைகள் ஏற்படும்போது பொது இடங்களில் அகற்ற முடியாத நிகாப் புர்கா போன்றவற்றை அனுமதி;க்கும் நோக்கம் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசிலிருந்து பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் முகக்கவசங்கள் முகமூடிகள் போன்வற்றை பாதுகாப்பு தேவை ஏற்பட்டால் அகற்ற முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.