இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த 86 வயது பெண்ணொருவர், கம்பஹா பகுதியை சேர்ந்த 76 வயது பெண்ணொருவர், கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 61 வயது ஆணொருவர்,பமுனுகம பகுதியை சேர்ந்த 78 வயது ஆணொருவர் மற்றும் களுத்துறை பகுதியை சேர்ந்த 94 வயது பெண்ணொருவர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது.