கத்தோலிக்க தேவாலயம் அருகில் சந்தேகத்திடமாக நடமாடிய இளம் தம்பதியினர்; வத்தளை பொலிஸாரால் கைது!‌

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கத்தோலிக்க தேவாலயம் அருகில் சந்தேகத்திடமாக நடமாடிய இளம் தம்பதியினர்; வத்தளை பொலிஸாரால் கைது!‌


வத்தளை - ஹேகித்த வீதியில்‌ அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயம்‌ ஒன்றுக்கு அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில்‌ நடமாடியதாக, திருகோணமலை - மூதூர்‌ பகுதியைச்‌ சேர்ந்தவர்கள்‌ என கூறப்படும்‌ இளம்‌ தம்பதியினரை வத்தளை பொலிஸார்‌ கைது செய்துள்ளனர்‌.


இரண்டரை வயது கை குழந்தையுடன்‌ குறித்த தம்பதியினர்‌ சந்தேகத்துக்கிடமான முறையில்‌, ஹேகித்த வீதியில்‌அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயம்‌ ஒன்றுக்கு அருகே நடமாடியபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்‌ தலைமையகம்‌ தெரிவித்தது.


நேற்று முன்தினம்‌ இரவு 11.30 மணியளவில்‌ இவர்கள்‌ கைது செய்யப்பட்டுள்ளதுடன்‌, கைது செய்யப்படும் போது அவர்களது ஆள்‌ அடையாளம்‌, வதிவிடம்‌ உள்ளிட்ட எந்த தகவல்களையும்‌

உறுதி செய்ய எந்த ஆவணமும்‌ அவர்களிடம்‌ இருக்கவில்லை என வத்தளை பொலிஸார்‌ தெரிவித்தனர்‌.


இந்நிலையிலேயே அவர்களை‌ கைது செய்து பொலிஸ்‌ நிலையம்‌ அழைத்து வந்ததாக கூறும்‌ பொலிஸார்‌, இன்று (15) மாலையாகும் போதும்‌ அவர்கள்‌ பொலிஸ்‌ நிலையத்தில்‌ தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக கூறினர்‌.


$ads={1}


குறித்த இளம்‌ தம்பதுயிடரிடம்‌, தேசிய உளவுச்‌ சேவை, பொலிஸ் விசேட நடவடிக்கை பிரிவு, மேல்‌ மாகாண உளவுச்‌சேவை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புக்களும்‌ விஷேட விசாரணைப்‌பிரிவுகளின்‌ அதிகாரிகளும்‌ வத்தளை பொலிஸ்‌ நிலையம்‌ சென்று விசாரணை செய்துள்ளனர்‌.


விசாரணைகள்‌ இன்று மாலையாகும்‌ போதும்‌ நிறைவடையாத நிலையில்‌, ஆள்‌ அடையாளத்தை உறுதி  செய்ய தவறிய நிலையில்‌ சந்தேகத்தில்‌ கைது செய்யப்பட்ட குறித்த இளம்‌ தம்பதி வத்தளை பொலிஸ்‌ நிலையத்தில்‌ தொடர்ந்தும்‌ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்‌.


-எம்‌.எப்‌.எம்‌.பஸீர்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.