கொஹுவெல பகுதியில் காருக்குள் எரியுண்ட வர்த்தகரின் மரபணு பரிசோதனை முடிவு வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொஹுவெல பகுதியில் காருக்குள் எரியுண்ட வர்த்தகரின் மரபணு பரிசோதனை முடிவு வெளியானது!


கொஹுவல பகுதியில் காரொன்றில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம், 33 வயது வர்த்தகருடையது என மரபணு பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


வர்த்தகரின் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகளைக் கொண்டு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


$ads={1}


கொஹுவல, ஆசிரி மாவத்தையில் கடந்த 10 ஆம் திகதி  இரவு 11.30 மணியளவில் கார் ஒன்றினுள் எரியுண்ட நிலையில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில் பிரேத பரிசோதனைகள் நாளை நடத்தப்படவுள்ளதுடன், அதன்பின்னர் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்றும்  ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.