மத ரீதியான பாடசாலைகள் காணப்படுகின்றமை காரணமாக இனங்களுக்கிடையே ஒன்றுமையின்மை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (15) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிலத்தை இணைத்து பாலம் அமைத்துள்ள போதிலும் , இனங்களை இணைத்து உறவுப்பாலம் அமைக்க நாம் தவறியுள்ளோம். தமிழ் மற்றும் முஸ்லீம் இனத்தவர்கள் எங்களை விடுத்து தொலைவில் உள்ளனர். பக்கத்தில் உள்ள கிராமத்தில் முஸ்லீம்கள் வாழ்ந்தாலும் சமூகம் என்ற ரீதியில் நாம் நீண்ட இடைவெளியில் இருக்கின்றோம்.
இது அன்மையில் ஏற்பட்ட ஒன்று அல்ல, மிக நீண்ட காலத்துக்கு முன்னதாக இடம்பெற்றது.
$ads={1}
1970 ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் தமிழ் முஸ்லிம் சிங்கள மாணவர்கள் ஒருதாய் நாட்டு பிள்ளைகளாக ஒன்றாக பாடசாலைகளில் கல்வி கற்று வந்துள்ளோம். இதனால் சகோதர தன்மை பெருகியது. ஆனால் அந்த காலப்பகுதில் கல்வி அமைச்சராக இருந்த பதுர்தீன் மஹமுத் அவர்கள் முஸ்லீம் பாடசாலைகளை உருவாக்கினார். இதனால் முஸ்லீம் மாணவர்கள் அங்கு கல்வி கற்க விரும்பினர். இந்த முஸ்லிம் பாடசாலைகளுக்கு கல்வி திட்டங்களை உருவாக்கிய அதிகாரிகள் காலப்போக்கில் மத ரீதியான தீவிரவாதத்திற்கு திரும்பினர். இதனால் பாடசாலைகளில் கற்பிக்கப்படும் மத தர்மமானது மறைக்கப்பட்டு வஹாப் வாதமானது கற்பிக்கப்படுகின்றது என்றார்.