கொழும்பு நகரில் சுவாசிப்பதில் நெருக்கடி - மக்கள் அச்சத்தில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு நகரில் சுவாசிப்பதில் நெருக்கடி - மக்கள் அச்சத்தில்

கொழும்பில் ஒட்சிசன் வாயுவின் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் கொழும்பு நகரில் வளி மாசடைதலைத் தடுப்பதற்கு சுற்றாடல் அமைச்சும் கொழும்பு மாநகரசபையும் இணைந்து கூட்டு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் கொழும்பு மாநகரசபையின் மேயர் ரோசி சேனாநாயக்க உள்ளிட்டவர்கள் அதிகாரிகளுடன் முன்னெடுத்திருந்த கலந்துரையாடல்களின் போது இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு நகரின் ஒட்சிசன் அளவினை நாள் தோறும் அளவீடு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

கொழும்பு நகரின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்குத் தேவையான நிபுணத்துவ மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு மாநகரசபையின் மேயர் ரோசி, அமைச்சரிடம் கோரியுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.