ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அதிரடி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அதிரடி அறிவிப்பு!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதல்லை என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் மாநாட்டில் அவர் இந்த விடயத்தை அழுத்தமாக தெரிவித்திருந்ததாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்திருக்கின்றது.

அடுத்து வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையின மக்களின் வாக்குகளையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்பதுடன் , அந்நபருக்கு தனது சார்பான சிங்கள பௌத்த மக்களும் வாக்களிக்கும் நிலைமை உருவாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் பஸில் ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கும் வகையில், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபயவையே போட்டியிடச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றதாகவும் கூறப்படும் நிலையில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு விமல் அணிக்குப் பலத்த ஏமாற்றாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.