சீனாவுடனான இராஜதந்திர உறவுகளின் போது இது மிகவும் கவனமாக இருப்பதாகவும், இலங்கையை போன்று இக்கட்டான நிலைக்கு தள்ளப்படாமல் இருக்க கவனமாக இருப்பதாக பங்களாதேஷ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டு பிரதமரின் வெளியுறவு ஆலோசகரை குறிப்பிட்டு பங்களாதேஷ் செய்தி பத்திரிகை ஒன்று இதனை வெளியிட்டுள்ளது
பல வளரும் நாடுகள் ஏற்கனவே சீன செல்வாக்கின் கீழ் உள்ளன என்றும், மேலும் சீனாவிற்கு அடிபணியவும் வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சீனாவை கையாள்வதில் இலங்கை அரசு பல சிரமங்களை நேர்கொண்டுள்ளதோடு, அதனை அறிந்து கொண்ட பங்களாதேஷ் அரசாங்கம் சீனாவை மிகவும் கவனமாக கையாண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.