“எதிர்க்கட்சி நாட்டை வளரவிடாமல் சேறு பூசுகின்றது” - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

advertise here on top
Join YazhNews WhatsApp Community

“எதிர்க்கட்சி நாட்டை வளரவிடாமல் சேறு பூசுகின்றது” - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

அரசாங்கத்தின் கொள்கை மற்றும் மேம்பாட்டு பிரச்சாரத்துடன் நாட்டை கட்டியெழுப்ப மாகாணசபை அரசியல் பிரதிநிதிகள் கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று, எதிர்க்கட்சி நாட்டை வளரவிடாமல் சேறு பூசுகின்றது. அரசாங்கத்தின் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்து அபிவிருத்தி பணிகள் தொடர வேண்டும்.

அரசாங்கத்தின் திட்டங்களை முறையாக செயல்படுத்துவதன் மூலம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த 26 ஆம் திகதி பிற்பகல் பத்தரமுல்ல தியத உயன வளாகத்தில் நடைபெற்ற மாகாண சபை பிரதிநிதிகள் கூட்டத்தில் ஜனாபாதி கலந்துகொண்ட போதே இக்கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

மேல் மாகாணம், வடமேல் மற்றும் தென் மாகாணங்களைச் சேர்ந்த மாகாணசபை அரசாங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.