இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை நுகர்வுக்கு ஏற்றதல்ல என்பதால் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜேதாச ராஜபக்ஷ அவரது முகப்புத்தக பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயின் 13 கொள்கலன்கள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளன என்று அவரது முகப்புத்தக பதிவு குறிப்பிட்டுள்ளது, இதில் புற்றுநோயை உண்டாக்கும் 'அஃப்லாடாக்சின்' என்ற புற்றுநோயை உண்டாகக்கூடிய பதார்த்தம் கலந்திருப்பதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.