கொரோனா தீவிரம் - இரு வாரங்களுக்கு சமய நிகழ்வுகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் பலவற்றுக்கு தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தீவிரம் - இரு வாரங்களுக்கு சமய நிகழ்வுகள், மேலதிக வகுப்புக்கள் மற்றும் பலவற்றுக்கு தடை!

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து சமய பள்ளிகள், தனியார் கல்வி வகுப்புகள் மற்றும் விருந்துபசாரங்கள் இரண்டு கிழமைகளுக்கு இடை நிறுத்த எம்பிலிபிட்டிய கொரோனா தடுப்பு சங்கம் முடிவு செய்துள்ளது.

கொரோனா நிலைமை இந்த நாட்களில் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்திலும் அதைச் சுற்றியும் பரவி வருகிறது. இன்று (06) கூடியிருந்த கொரோனா தடுப்பு குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எம்பிலிபிட்டிய பிரதேச சபைத் தலைவர் சுரந்த வீரசிங்க தெரிவித்தார்.

மேலும், வீட்டு விழாக்கள், ஞாயிறு பள்ளிகள் மற்றும் தனியார் வகுப்புகள் நடத்த இரண்டு வார காலத்திற்கு தடை விதிக்கப்படும் என்றும் முன்பள்ளிகளும் இதில் அடங்கும் என்று எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் தெரிவித்தார்.

ஏனைய விழாக்களில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கும், இறுதிச் சடங்குகளில் உணவு விநியோகத்தை தடை செய்வதற்கும், ஒரு நாளுக்குள் அடக்கம் செய்வதற்கும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக எம்பிலிபிட்டி நகரசபை கவுன்சிலர் ருவண் பதிரன தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.