
தீவிரவாத பிரச்சாரங்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் 44 வயதான நபர் ஒருவர் மாவனெல்லையில் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையரான இந்நபர் சில மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடுகடத்தப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்பின்னர் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்படி அவர் தீவிரவாத நடவடிக்கைக்கு பணம் பெற்றுக்கொண்டவர் எனவும், அவரின் லேப்டாப் கணினியை பரிசோதனை செய்தபோது அவர் தீவிரவாதத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதேவேளை காத்தான்குடி பிரதேசத்தில் 27 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு பொலிஸில் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளார்.
இதனை அடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இவரை விசாரிக்க நீதிமன்றில் அனுமதி பெற்று விசாரிக்க அனுமதி பெற்றுள்ளனர்.
குறித்த நபர் சாய்ந்தமருது தாக்குதலில் சம்பந்தப்பட்ட ரிஸ்வானுடன் தொடர்புகளை மேற்கொண்டவர் எனவும் இவர் காத்தான்குடி பிரதேசத்தில் அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.