பொலிஸ் அதிகாரியினை கொலை செய்ய முயன்றதோடு, தப்பித்துச் செல்ல முயன்ற ஊனமுற்ற சாரதி கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸ் அதிகாரியினை கொலை செய்ய முயன்றதோடு, தப்பித்துச் செல்ல முயன்ற ஊனமுற்ற சாரதி கைது!

கொழும்பு நீர்கொழும்பு வீதியில் அமைந்துள்ள பேலியகொட மீன் சந்தை சந்திக்கு அருகில் போக்குவரத்து கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது வண்டியை செலுத்த முயன்ற குற்றச்சாட்டில் லொரி ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (29) தனது வாகனத்தை பரிசோதிக்க முற்பட்ட போது, ​​வாகன சாரதி தப்பித்துச் செல்ல முயன்றதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர், பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) அஜித் ரோஹன தெரிவித்தார்.

குறித்த சாரதி ஊனமுற்றவர் என்றும் செல்லுபடியாம சாரதி உரிமம் இல்லாமலே குறித்த வாகனத்தை செலுத்தியதாகவும் கண்டறியப்பட்டது என்றார்.

ஊனமுற்ற நிலையில் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமானது என்று விளக்கமளித்தபோது சந்தேக நபர் தப்பித்துச் செல்ல முயன்றுள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிள் தப்பித்துச் செல்ல முயன்ற நபரை தடுத்து கைது செய்தும் உள்ளார்.

கொலை முயற்சி குற்றச்சாட்டில் சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.