நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை மீண்டும் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை மீண்டும் அதிகரிப்பு!

Essential good sri lanka
இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் சந்தையில் உயர்வடைந்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் சந்தைக்கு தேவையான அளவு உற்பத்தி பொருட்கள் கிடைக்காமையே இந்த விலை அதிகரிப்பிற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கௌபி, பயறு, உளுந்து, குரக்கன் மற்றும் மஞ்சள் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலைகளே இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

$ads={1}

பயறுக்கு சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ கிராம் மஞ்சளின் விலை 4,000 முதல் 5,000 ரூபாவிற்கும் இடையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் ஒரு கிலோ கிராம் கௌபியின் விலை 600 ரூபாய் வரை அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோ கிராம் உளுந்து 1,600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.