ஒருவரின் மரணம் மற்றும், மற்றொருவரின் உடல்நிலையில் பாதகமாற்றம் என்பவற்றை அடுத்து முன்னெச்சரிக்கையாக ஒஸ்ரியா நாட்டின் அரசாங்கம் அஸ்ரா செனக்கா தடுப்பூசிகள் செலுத்துவதை உடன் இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு 49 வயதான ஒரு பெண்ணொருவர் பல்வேறு பிரச்சனைகளின் விளைவாக மரணமானார். அதே நேரத்தில் 35 வயதான ஒரு பெண் நுரையீரல் பிரச்சனையை எதிர்நோக்கியிருக்கிறார்.
எனினும் இந்த தொற்று ஏற்பட்டமைக்கான காரணம் காவல்துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை "தடுப்பூசியுடன் தொடர்புடைய கடுமையான பாதகமான நிகழ்வுகள் எதுவும் இதுவரை உலகளாவிய ரீதியில் உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும் ஒஸ்ரிய ஆஸ்திரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், விசாரணையை முழுமையாக தாம் எதிர்ப்பாதாகவும் அஸ்ரா செனக்கா தடுப்பூசிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.