புர்கா மற்றும் நிகாப் ஆகிய முஸ்லிம்களின் ஆடைகள் மீது தடை விதிக்கும் எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சு இன்று (16) மாலை அறிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தபோது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் இத்தடை பத்திரம் சமர்பிக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் நேற்று அப்படியொரு பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையிலேயே மேற்படி அட்மிரல் ஜயனாத் கொலம்பகேயின் அறிவிப்பு வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.