மன்னாரில் இன்று ஏற்பட்ட விபத்தில் 09 வயது சிறுவன் பலியாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.
பாடசாலை மாணவர்கள் பயணித்த பஸ் தலைமன்னார் நோக்கி பயனித்த பேருந்து ரயிலுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் 09 வயது சிறுவன் பலியாகியுள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (16) பகல் ஏற்பட்ட இந்த விபத்தில் 20 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்து தற்சமயம் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.