இன்றும் ஐந்தாவது நாளாக கொரோனா மரணங்கள் நல்லடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றும் ஐந்தாவது நாளாக கொரோனா மரணங்கள் நல்லடக்கம்!


கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்கள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அடக்கம் செய்யும் நிகழ்வு இன்று (09) ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்றது. 


இன்று பிற்பகல் 04 மணிவரை ஏழு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.


இதில் ஐந்து ஆண்களும் இரண்டு பெண்களது ஜனாஸாக்களுமாக ஏழு ஜனாஸாக்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் சாய்ந்தமருது, தர்கா நகர், திருகோணமலை, வெள்ளவத்தை, மாவனல்லை பிரதேசங்களை சேர்ந்த ஒவ்வொரு ஜனாஸாவும், அக்குறனை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு ஜனாஸாக்களும், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொரோனா தொற்றினால் மரணிக்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய ஒதுக்கப்பட்ட மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


$ads={1}


இதற்கமைய ஐந்து நாட்களில் 38 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.