வீதியில் கதிரையில் அமர்ந்த நிலையில் உயிரிழந்த இளைஞர்! மஹர பகுதியில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீதியில் கதிரையில் அமர்ந்த நிலையில் உயிரிழந்த இளைஞர்! மஹர பகுதியில் சம்பவம்!


மஹர - மல்வத்த வீதியில் வீடொன்றுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் காணப்பட்ட இளைஞரொருவரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தற்போது பகிரப்பட்டுவருகிறது.


வீதியில் சென்று கொண்டிருந்த இந்த இளைஞர், நெஞ்சுவலியால் அவதிப்பட்டவாறு நடந்து செல்வதை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர். அதன்பின்னர், அவர் வீதியின் அருகிலுள்ள கதிரையில் அமர்ந்தவாறே சிலநேரத்தின் பின்னர் உயிரிழந்துள்ளதாக சம்பவத்தை நேரில் அவதானித்த பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.


கடவத்தை, கொபியாவத்தை பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்துவந்த 34 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளது.


$ads={1}


மேலும் உயிரிழந்த இளைஞருக்கு இன்று (09) பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் முடிவு நாளைய தினம் கிடைக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனைகளும் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக கடவத்தை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.