இலங்கையில் பஸ் சாரதிகளுக்கு புதிய சாரதி அனுமதிப் பத்திரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் பஸ் சாரதிகளுக்கு புதிய சாரதி அனுமதிப் பத்திரம்!


நாட்டில் அதிகரிக்கும் பஸ் விபத்துக்களை கருத்திற்கொண்டு, புதிய பயணிகள் போக்குவரத்து பஸ் சாரதி அனுமதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.


இதன்படி, கனரக வாகன அனுமதிப் பத்திரத்தை மாத்திரம் பயன்படுத்தி எதிர்வரும் காலங்களில் பஸ்ஸை செலுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 


பயணிகள் போக்குவரத்து சாரதி அனுமதிப் பத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.


இதன்படி, பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் சாரதிகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கி, அதனூடாக புதிய சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை போக்குவரத்து சபை மற்றும் பாதுகாப்பு பிரிவினர் இணைந்து இந்த திட்டத்தை தயாரித்து வருவதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.