அரசின் தவறுகளை மறைக்க சரத் வீரசேகர புதிய விவகாரங்களை உருவாக்கிய வண்ணம் உள்ளார்! -AKD

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசின் தவறுகளை மறைக்க சரத் வீரசேகர புதிய விவகாரங்களை உருவாக்கிய வண்ணம் உள்ளார்! -AKD


அமைச்சர் சரத் வீரசேகர, அரசாங்கத்தின் தவறுகளை மறைப்பதற்காக புதிய விவகாரங்களை உருவாக்கிய வண்ணம் உள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


ஈஸ்டர் ஞாயிறு தாக்குல் சம்பவம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் தெரிவித்துள்ளார்.


இவ்வாறு அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே அநுர குமார திசாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


சரத் வீரசேகர வெளியிடும் கருத்துக்கள் சிறுப்பிள்ளைத்தனமாக காணப்படுவதுடன், பாரத்தூரமானதாக இருக்கின்றது.


மேலும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குல் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, சுமார் 15 மாதங்களாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.


இதன்போது இவ்விவகாரம் தொடர்பாக என்னிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென எவரும் குறிப்பிடவில்லை.


இந்நிலையில் , என்னிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் திடீரென சரத் வீரசேகரவுக்கு வருவதற்கான காரணம் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.