கொரோனா சடலங்களை இரணைத் தீவில் அடக்கம் செய்வதற்காக எடுக்கப்பட்ட முடிவு ஒரு ஆரம்ப கட்டமாக மட்டுமே எடுக்கப்பட்டதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொரோனா சடலங்கள் தற்போது மட்டக்களப்பு, ஒட்டமாவாடி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா சடலங்களை அனைத்து மாவட்டங்களிலும் அடக்கம் செய்ய் பொருத்தமான இடங்களை தேர்ந்தெடுக்குமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதனடிப்படையில், எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள இடங்களில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து ஜனாஸாக்களும் இன்றும் நாளையும் அடக்கம் செய்யப்படும் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொரோனா சடலங்கள் தற்போது மட்டக்களப்பு, ஒட்டமாவாடி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா சடலங்களை அனைத்து மாவட்டங்களிலும் அடக்கம் செய்ய் பொருத்தமான இடங்களை தேர்ந்தெடுக்குமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதனடிப்படையில், எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள இடங்களில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து ஜனாஸாக்களும் இன்றும் நாளையும் அடக்கம் செய்யப்படும் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.