நாட்டில் அனைத்து இடங்களிலும் கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய தீர்மானம்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் அனைத்து இடங்களிலும் கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய தீர்மானம்!!!

கொரோனா சடலங்களை இரணைத் தீவில் அடக்கம் செய்வதற்காக எடுக்கப்பட்ட முடிவு ஒரு ஆரம்ப கட்டமாக மட்டுமே எடுக்கப்பட்டதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். 

கொரோனா சடலங்கள் தற்போது மட்டக்களப்பு, ஒட்டமாவாடி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா சடலங்களை அனைத்து மாவட்டங்களிலும் அடக்கம் செய்ய் பொருத்தமான இடங்களை தேர்ந்தெடுக்குமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதனடிப்படையில், எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள இடங்களில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில், குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் அனைத்து ஜனாஸாக்களும் இன்றும் நாளையும் அடக்கம் செய்யப்படும் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.