கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் அமைந்துள்ள காணியிலே இவ் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டன.
பாதுகாப்புப் படையினர் மற்றும் சுகாதாரப் பிரிவினர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இன்று பிற்பகல் 04 மணி வரை இரு ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டன.
இன்றைய தினம் பத்து ஜனாஸாக்களை அடக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனாஸாக்களை அடக்கும் பகுதிற்குள் யாரும் செல்லாத வகையில் இராணுவத்தினர் கடும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
அத்துடன் ஜனாஸா அடக்கம் செய்யும் இடத்துக்குள் செல்வதற்கு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-எச்.எம்.எம்.பர்ஸான், எஸ்.எம்.எம்.முர்ஷித்