இன்றைய தினம் (11) கொரோனா தொற்றினால் பலியானோரின் எண்ணிக்கை 05 ஆக பதிவாகியது.
நாவலபிட்டிய பகுதியை சேர்ந்த 56 வயது பெண்ணொருவர், அங்குலான பகுதியை சேர்ந்த 63 வயது பெண்ணொருவர், மத்தேகொட பகுதியை சேர்ந்த 80 வயது பெண்ணொருவர், பிபிலை பகுதியை சேர்ந்த 67 வயது ஆணொருவர் மற்றும் தெஹிவளை பகுதியை சேர்ந்த 68 வயது ஆணொருவருமே இவ்வாறு பதிவாகினர்.
அதன்படி, கொரோனா தொற்றினால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 520 ஆக உயர்வடைந்துள்ளது.