வெளிநாடு செல்ல முட்பட்ட ராஜபக்‌ஷவினை தடுத்து நிறுத்திய விமான நிலைய அதிகாரி - விமான நிலையத்தில் பரபரப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாடு செல்ல முட்பட்ட ராஜபக்‌ஷவினை தடுத்து நிறுத்திய விமான நிலைய அதிகாரி - விமான நிலையத்தில் பரபரப்பு!


விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று காலை கடுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட ஆயத்தமான போது, ​​விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகழ்வு துறை அதிகாரிகளுக்கு நாமல் ராஜபக்‌ஷவிற்கு நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை நீக்குவது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் சுமார் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் துபாய் நோக்கி புறப்பட நேற்று காலை 10 மணிக்கு செல்ல விமான நிலையத்தை தனது குழுவினருடன் வந்தடைந்தார்.

கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நாமல் ராஜபக்ஷ மீது இரண்டு வெளிநாட்டு பயணத்தடை உத்தரவுகளை விதித்திருந்தது, அவற்றில் ஒன்று கடந்த 4 ஆம் திகதி நீக்கப்பட்டதுடன், மற்றொன்று அதே நாளில் நீக்கப்பட்டது.

மேலும், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று நாட்டை விட்டு வெளியேற காட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்ததோடு, அவரின் வெளிநாட்டு பயணம் நிராகரிக்கப்பட்டிருந்தது.  பின்னர் அனுமதி வழங்கப்பட்ட உத்தரவு பத்திரிகை நீதிமன்றினால் தபால் மூலம் விமான நிலையத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. 

ஏமிரேட்ஸ் விமானம் சுமார் 45 நிமிட தாமதத்திற்குப் பிறகு காலை 10.45 மணிக்கு கட்டூநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் நோக்கி புறப்பட்டது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.