சக்திவாய்ந்த அமெரிக்காவினாலேயே தாக்குதலை தடுக்க முடியவில்லை! -மைத்திரி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சக்திவாய்ந்த அமெரிக்காவினாலேயே தாக்குதலை தடுக்க முடியவில்லை! -மைத்திரி


இரண்டு வாரங்களுக்கு முன்னரே செப்டம்பர் தாக்குதல் குறித்த ரகசிய தகவல் கிடைத்த போதிலும் அமெரிக்காவினால் தாக்குதலை தடுக்க முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவை இலங்கை மட்டுமல்ல, முழு உலகமும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

$ads={1}

"உலகின் மிக சக்திவாய்ந்த நாடு அதன் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் மற்றும் ஆயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டமையை தடுக்க முடியவில்லை" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்த இந்த நிகழ்வில் ஞானசார தேரரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.