
இந்தச் சம்பவம் நேற்றிரவு (28) யாழ்ப்பாணம், நிலாவரை புத்தூர் - இராசபாதை வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரே உயிரிழந்தார்.
தாக்குதலுக்கு உள்ளான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அச்சுவேலி பொலிஸார், தாக்குதல் நடத்தியவரைத் தேடி வருகின்றனர்.