ஈஸ்டர் தாக்குதல்; என்மீதான குற்றச்சாட்டுக்களை நான் கருத்தில் கொள்ளவில்லை! -முன்னாள் ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல்; என்மீதான குற்றச்சாட்டுக்களை நான் கருத்தில் கொள்ளவில்லை! -முன்னாள் ஜனாதிபதி

Former President Maithripala Sirisena aims to become Speaker800 × 462 Lanka News Web Former President Maithripala Sirisena

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் என்னை குற்றவாளிகளாக அடையாளப்படுத்தியே ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.


என்னை குற்றவாளி என குற்றம் சுமத்த முடியும், ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை நான் கருத்தில் கொள்ளவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.


ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


தாக்குதல் நடத்தப்பட்ட வேளையில் நான் நாட்டில் இருக்கவில்லை, அதேபோல் புலனாய்வு தகவல்கள் எனக்கு வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் பிரதான குற்றவாளிகள் எவரையும் கண்டறிய முடியாது போயுள்ளது. 


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராயவும் உண்மைகளை கண்டறியவும் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு இப்போது அறிக்கையை வெளியிட்டுள்ளது.


$ads={1}


இதில் உண்மையான காரணிகள் எதுவும் வெளிப்படவில்லை. மாறாக என்னை குற்றஞ்சுமத்தும் பரிந்துரைகளை ஆணைக்குழு முன்வைத்துள்ளது.


நாட்டில் குற்றச்சாட்டு சுமத்தப்படாத நபர் யார் உள்ளார்? எனவே இப்போது என்மீதும் அவ்வாறே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை நான் ஒருபோதும் கருத்தில் கொள்ளப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


-ஆர்.யசி


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.